விநாடிக்கவிதைகள் 4

விநாடிக்கவிதைகள்
===========================================ருத்ரா


உரசினால் உடனே கலர் கலராய்
பற்றிக்கொள்ளும்
மத்தாப்பு மட்டும் தான் காதலா?

______________________________________________


காதலியின் உதடு தேடிய யாத்திரையில்
காலம் எனும் கவர்ச்சியான
காதலியை தழுவிக்கொள்வதும் காதலே.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_________________________________________________‍‍


"நாளென ஒன்றுபோல் காட்டி
உயிர் ஈரும்" அந்த வாள்
எத்தனை ரத்தினக்கற்கள் பதித்தது?

__________________________________________________


சித்தர்கள் சிவம் எனும் ஆழத்தை
காட்டுவதற்கும்....முதலில்
அந்தக்கடலில் விழுந்து எழு என்கிறார்கள்.

________________________________________________

கஜுராஹோ எனும்
கல் பரிமாணம்..காதலுக்கு
ஒரு கனபரிமாணம்.

_________________________________________________


சிற்றின்ப பேரின்ப கனபரிமாணங்கள்
உடைந்து நொறுங்குவது
இயற்கையும் மனிதமும் கலக்கும்போது தான்.

___________________________________________________



ஆணில் பெண்.பெண்ணில் ஆண்.
இதில் எழுத்துக்கள் கூட்டி
இலக்கியம் பேசினால்
உருட்டுக்கட்டைகளின் பஞ்சாயத்து எதற்கு?

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍___________________________________________________


உடலுக்குள் உள்ளம்
கிணறு வெட்டுவதும்
உள்ளத்துள் உடல்
மின்னல் வெட்டுவதுமே காதல்.


___________________________________________________

ஆதலால் காதல் செய்வீர்.
கண்ணும் காதும் வாயில்"கைபேசி"
பாலம் கட்டிக்கொள்ளட்டும்.

‍‍‍‍‍‍‍‍‍‍__________________________________________________________

எழுதியவர் : ருத்ரா (14-Jun-15, 12:11 pm)
பார்வை : 132

மேலே