ஓடுமா ஓடாதா
அண்ணே ..நம்ம படத்தோட தயாரிப்பாளர் வர்ரர்னே ... வரட்டும் ...
வாங்க சார் .....
வர்றது இருக்கட்டும்யா என்னத்த படம் எடுத்து இருக்க ,படத்த 20 நிமிடம் என்னாலே பார்க்க முடியல ..ஒரு பய படத்த வாங்கமாட்டான் ..எனக்கு திருவோடு தான்
சார் படத்துக்கு விளம்பரம் வேணும் அதனாலே கொஞ்சம் பணம் தந்தா நல்ல விளம்பரம் படுத்தி படத்த ரிலீஸ் பண்ணிடலாம் ..
போதும்யா போதும் ..என்கிட்ட ஒரு பைசா இல்ல ..
சரி சார் எனக்கு ஒரு வாரம் டைம் கொடுங்க படத்த நான் விளம்பர படுத்தி ரிலீஸ் பண்ணிடுறேன்...
எதாவது செஞ்சி தொலை ,,,
ஒரு வாரம் கழித்து ....
........
......
அன்றைய செய்திதாளிலும் ,தொலைகாட்சி செய்தியிலும் ,,,
ஓடுமா ?ஓடாதா? படத்திற்கு தமிழகத்தின் கடை கோடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் ,சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை பெற்றுள்ளார் ,....இதை பற்றிய விவரம் பின்வருமாறு ..
இந்த திரைப்படம் வெளியானால் எங்கள் மாவட்டத்தில் கலவரம் வெடிக்கும் சூழ்நிலை உருவாகும் மற்றும் எனக்கும் உயிர் ஆபத்து ஏற்படும் என்றும் கேட்டு தடை கேட்டுள்ளார் ...ஆகையால் இந்த திரைபடத்திற்கு இடைக்கால தடை விதிக்கபடுகிறது .....
இதை பற்றி மக்கள் கருத்தை கேட்டோம் ..அதற்கு அவர்கள் ...
இந்த திரைப்படம் வரணும் நாங்க பார்க்கணும் கோர்ட் தடை விதித்து உள்ளத்தால் பார்க்க முடியாத சூழ்நிலை இருக்கு ,விரைவில் வெளிவரும் நாங்க குடும்பத்தோட பார்க்க ஆவலாக உள்ளேன்.....
...............
..............
தயாரிப்பாளர் வாய் எல்லாம் பல்லாக வந்தார் ....
யோவ் டைரக்டர் சாதிச்சிட்ட .....படத்த இப்ப வாங்குறதுக்கு போட்டி போடுறாங்க ...என்னோட அடுத்த படத்துக்கும் நீ தான் ...