இதயம் அழுகின்றது!

கன்னியின்
முகத்தைப் பார்த்ததும்
களவு போனது மனது!
கன்னியவள்
காதலைச் சொன்னால்
கன்னித் தமிழில்
கவிதை கொட்டியது!
கன்னியவள்
என்னைவிட்டுப் பிரிந்தால்
என் இதயத்தில்
உதிரம் கொட்டியது!.

எழுதியவர் : இரா.குமார்.,பி.லிட். (12-May-11, 11:37 pm)
சேர்த்தது : R.K.Kumar., MMV
பார்வை : 480

மேலே