சம்மதம் கிடைத்தது

சித்திரையில்
என் நித்திரையை கலைத்தவனே
வைகாசியில்
என்னை வாட்டி எடுத்தாய்
ஆனியில்
என்னை ஆட்டி வைத்தாய்
ஆடியில்
என்னுள் ஆசைகளை ஊட்டினாய்
ஆவணியில்
உனக்கு கடிதம் கொடுத்தேன்
புரட்டாசியில்
எனக்கு புத்திகள் கூறினாய்
ஐப்பசியில்
அனைத்தும் நீயாக தெரிந்தாய்
கார்த்திகையில்
உன் காதலை சொன்னாய்
மார்கழியில்
நடுங்கும் குளிருடன் மாமனாரை பார்த்தேன்
தையில்
நீ தைரியம் கொடுத்தாய்
மாசியில்
மாமனார் சம்மதம் கிடைத்தது
பங்குனியில்
உன் பக்கத்தில் மணமகளாய் நான் ..!