தேர்தல் நாள் ---------ஊவகணேசன்

பிணங்கள் கூட
கை முத்திரையாய்
கருப்பு மையோடு
காட்சி தருகின்ற
கலிகாலம்.....

பிணக்கைதிக்கு
கல்லரைச்
சிறையிலிருந்து
விடுதலை தரும்
தேர்தல் தேவதையின்
பிரசவக் காலம்.....

கல்லரை மரத்தின்
பிண இலைகள்
காணாமல் போகும்
தலையுதிர்க்காலம்......

உழைக்காமலேயே
ஊதியம் பெறும்
நல்ல நேரம்.....

வறுமையிலும்
வாக்குச்சாவடி எனும்
சுற்றுலாத் தளத்திற்கு
வசதியாக
வாகனத்தில்
சென்று வரும்
வக்கற்றவனின்
பொற்காலம்.....

தன்
தலையெழுத்தை
தானே
எழுதிக் கொள்ள
மாணவ மக்களுக்கு
பகவான் அருளிய
பரிட்சைக் காலம்....

ஒரு நிமிட வேலைக்கு
உயரிய கூலி தரும்
தர்ம தேவதை....

யாரோ ஒருவர்
பைகளை நிரப்ப
மக்கள் பலரும்
இன்று கைகளில்
கரைபட்டுக் கொள்கிறார்கள்.....

இது
ஏற்றமா?
இல்லை
ஏமாற்றமா.........?

------------ஊ.வ.கணேசன்-------------

எழுதியவர் : ganesan uthumalai (30-Jun-15, 3:03 pm)
பார்வை : 44

மேலே