அநாதை

தெரு ஓரம் உன்னைத்
தவிக்க விட்ட தாரு
தேராது இனிமேல் உனைத்
தேடி எவர் வந்தாலும்
பிரம்மாண்ட ஆலைதனில்
செதுக்கிச் செய்தனுப்பி
கண்ணாடிச் சோலையில்
களிப்புற காட்சி தந்து
மனம் மயங்கி வங்கி
தனம் பெற்று வாங்கியே
தினம் உனைக் கொண்டு
ஊரெல்லாம் சுற்றி வந்து
தினம் கழுவித் துடைத்து
பூவும் பொட்டும் வைத்து
சீராட்டிப் பாராட்டி இப்படி
சீந்தாமல் சென்றதற்கு இன்று
யாரேனும் காரணம் எனக்குத்
தீரேணும் சொல்லித் தான்!

எழுதியவர் : முரளி (1-Jul-15, 9:58 am)
Tanglish : anaadhai
பார்வை : 68

மேலே