தூங்கா ஓவியங்கள் -ரகு

கதையளந்து
காலம் தள்ளுவதாய்
வாங்கிக் கட்டிக்கொள்ளும்
இளைஞர் கையில்
இரைந்திருக்கிறது
கொஞ்சம் கனவுகளும்
நிறைய கடன்களும்

பரம்பரையில்
ஏழ்மையை உதிர்த்துவிட்ட
கல்லறைகள் மீது
ஏக்க பெருமூச்சிடும்
கருவேலம் பூக்கள் கூட
சுவாசிக்கக் கசந்ததே

ஊற்றுகள் எனப் பாராமலும்
பைஞ்சுதைக் கலவைப் பூச்சுக்கு
அதிகாரமிடுகிறது
அரசுமிங்கு

பொறுப்பும் பழியும்
தீசுவாலையாய் உதிரத்
துடித்துப் போகும்
இளைஞர் மீதிற்
காலங்கள் பதிக்கும்
ஏளனத் தடையங்களை

லச்சோப லச்சங்கள்
குவிந்து கலகலக்கும்
மாளிகைகளில் அல்ல
குடிசைக்குள்தான்
'அறிவின் அடர்த்தி'
நிதர்சனங்களில்

மீந்திருக்கும்
நம்பிக் 'கைகள்'
புரட்டும் புத்தகத்தின்
தலைமை வாசகமிது
''தூரிகைகள் தூங்கலாம்
தூங்குவதில்லை
ஓவியங்கள்''...!

எழுதியவர் : சுஜய் ரகு (8-Jul-15, 9:05 pm)
பார்வை : 139

மேலே