உன்னை முன்னேற்றும் கடவுள்

பெண்ணே
நீ இன்று பாரதியின்
புதுமை பெண்ணாக மாறிவிட்டாய்!
ஆம் -இன்று
அழகிற்காக அடிமை படுத்தப்படவில்லை,
அந்தபுரம் மட்டுமே சொந்தமில்லை,
ஆணின் சரி பாதி ஆகிவிட்டாய்
இல்லை, ஆணிற்கு நிகராகிவிட்டாய்.....................
========================
கல்வி உன்னை
வீட்டு தீயாக இருந்த உன்னை
நாட்டின் விடிவெள்ளி ஆக்கிவிட்டது!
காரணங்கள் பல சொன்ன சமூகம்
இன்று
உன்னை கை தட்டி வரவேற்கிறது...............
============================
எந்த இலக்கியமும்
உன்னை இழிவு படுத்தவில்லை
தாஜ்மகாலை கேட்டுப்பார்!
அன்று, ஒவ்வொரு வீரனும்
வெற்றி பெற்று உன்னை அடைந்தான்........
இன்று ,ஒவ்வொரு ஆணின்
வெற்றிக்கான கை வாள் நீதான் என்றால் மிகையில்லை !
==========================
ஆணின் கருவை மட்டுமே
சுமந்த நீ -இன்று
அவனின் கருவூலத்தையும்
காக்கின்றாய் என்றால்
அது நீ கற்ற கல்விதான்........
பெண்ணே
கல்வியை விட்டுவிடாதே -----அதுதான்
உன் முதல் 'காதலன்'
உன்னை முன்னேற்றும் 'கடவுள்'...........
============================

என்றும் அன்புடன்
அ . மணிமுருகன்

எழுதியவர் : (9-Jul-15, 3:43 pm)
பார்வை : 61

மேலே