என்ன தலைப்பு வைக்க குடிமகன்களே
என்பதுக்கும் மேலாம் எழுத்தறிவு விகிதம்
என் தாய்த் திருநாட்டிலும்
என் தமிழ்த் திருநாட்டிலும்
எழுத்தறிவை சோதிக்க
எழுதுகின்றேன் நான்
செந்தமிழில் சில வரிகள்
"மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு"
"குடி குடியைக் கெடுக்கும்"
"புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்"
என்பது விழுக்காடு எழுத்தறிவில்
இதைப் படிக்க தெரியவில்லை
எழுபது விழுக்காடு "குடிமகனுக்கு"
இல்லை
இவையேதும் தகாத வார்த்தைகளோ?
கற்றும் குருடாகிறான் கண்ணில் கண்டால்
காதுகள் செவிடாகிறான் சொல்லக் கேட்டால்
எழுத்தறிவில் ஏற்றம் கண்டு
என்ன பயன்?
என் தாய்நாட்டின் தலைவரெலாம் கைநாட்டு
ஆமாம்
என் தாய்நாட்டின் தலைவரெலாம் கைநாட்டு
எழுத்தறிவு பெற்றவரென்றால்
நாட்டுக்கு கேடென்றால்
நமக்கென்ன என்றிருப்பாரோ?