உண்மை முகங்காட்டு
கண்முன் காண்பவை முகங்களல்ல
கனிவாய்ப் பேச்சும் உண்மையல்ல,
வண்ணம் பலவாய் வகைவகையாய்
விரும்பிடும் விதமாய் முகமூடிகள்,
எண்ணம் வெளியே தெரிவதில்லை
எதுதான் உண்மை புரிவதில்லை,
உண்மை முகத்தினைக் காட்டிடுவாய்
உலகினில் மனிதம் நிலைபெறவே...!