உண்மை முகங்காட்டு

கண்முன் காண்பவை முகங்களல்ல
கனிவாய்ப் பேச்சும் உண்மையல்ல,
வண்ணம் பலவாய் வகைவகையாய்
விரும்பிடும் விதமாய் முகமூடிகள்,
எண்ணம் வெளியே தெரிவதில்லை
எதுதான் உண்மை புரிவதில்லை,
உண்மை முகத்தினைக் காட்டிடுவாய்
உலகினில் மனிதம் நிலைபெறவே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Jul-15, 6:53 am)
பார்வை : 68

மேலே