புன்னகைக்கிறாய்
புன்னகைக்கிறாய்..
தெறித்து விழும் நட்சத்திரங்களில்
எனக்கென எதை நான்
சேகரித்து வைத்துக் கொள்வேன்?
சிரித்துச் சொன்னாய்:
நட்சத்திரங்களை அள்ளுவதில் நீ
நாட்களைக் கடத்தினால்
எனையள்ளிக் கடத்திப் போயென்
ஏகாந்தம் தொலைப்பதெப்போது?