நண்பன் இன்று என்ன ஆனான்

கல்லூரி நாட்கள் கால்பாகம் என்றாலும்
கட்டவிழ்க்க முடியாமல் கரிகாலன் கல்லணைபோல்
காலங்கள் கரைக்காமல் கரையேறிய நம் நட்பு

ஊர் பார்த்து சொன்னார்கள் உறவுகளும் சொன்னார்கள்
"எம்மாத்ரம் நாளக்கிதான் இவங்களோட பிரண்ஷிப்போ"

வேலை வேராக ஆன பின்பும்
வேறு வேலையாக ஆன பின்பும்
நதிகளின் சங்கமம் போல்
நாம் இருந்தோம் ஓர்வீடு.

அலுவலகங்கள் மாறியும்
அவரவர் வருமானம் ஏறியும்
அறிந்ததில்லை என்றும் ஒரு வேறுபாடு.

கட்டாந்தரையில் உறங்கியும் கவலையில்லை
எச்சில் தட்டில் உண்டும் ஏதும் நேரவில்லை.

உனது ஆடை நான் அணிந்தபோது
"உனக்குதான் கச்சிதம் என்றாய்".

திசை வேறாக நான் சென்றாலும்
ஊர் என்னை உதாசினம் செய்தாலும்
பார் எல்லாம் உன்னால்தான்
என்று ஏதும் சொல்லாமல்
மார்பணைத்து தட்டிச்சென்றாய்.

எனக்கேதாவது என்றால்
முதலில் நீதான் நின்றாய்.

திருமணம் என்று வந்ததும்
உறவுகள் சொன்னது,நினைவுக்கு வந்தது.

இன்று

தேர் ஏதும் இல்லாததால்
கார் ஏறி வந்து நின்றாய்
சீர் செய்யும் அளவுக்கு
ஏன் வந்தாய் என்றேன்?

..................................
...................................
.................................

மௌனத்தின் இடைவெளியில்
விடை கிடைத்து திரும்பி பார்த்தேன்
என் மணைவி உனை அழைத்தாள் "அண்ணா"
____________________________________________________________________
------------

எழுதியவர் : r k samy (12-Jul-15, 1:08 am)
பார்வை : 195

மேலே