காதலின் சுவை

அவள் சாலையில் நடந்தால் ..
பூக்கள் பூக்கும்
மொட்டுக்கள் சிரிக்கும் ....

நான் பார்த்த இடமெல்லாம்
அவள் நடந்த கால் தடத்தில்
கற்கள் வைரமாக மாறின....

குழந்தையின் சிரிப்பில் கண்டேன்..
அவள் வந்து போனது...

ஊஞ்சலில் ஆடினாள்
சுற்றி உள்ள செடிகள்
தலை குனிந்தது
அவளின் அழகாள்...

மரத்தின் நிழலில் நின்றாள்
அவளின் வாசத்தில் மயங்கி
காய்கள் தரையில் குதித்து
உயிரை விட்டது...

அவள்
திராட்சை தோட்டம் சென்றால்
திராட்சை வரவேற்கும்....
பூந்தோட்டம் சென்றால்
பூக்கள் ஆறத்தி எடுக்கும்...

அவள்
ஆற்றில் ஓடும் மீனை பிடித்தால்
அவளின் கையை விட்டு விலகாமல்
மீன்கள் தூங்கியது....!

அவள்
கடலின் ஓரத்தில் நடந்து சென்றால்
அலைகள் தாங்க முடியாமல்
சுனாமியாக எழுந்தது...!

அவள் நடந்தால் சலங்கை ஒலி
கேட்டது போல இருந்தது....!

மாடியில் காற்றை நேசித்தால்
காற்று...
அவளின் காலடியில்
புரண்டது....!

செவ்வானம் திறந்தது போல
அவளின் கண்கள் திறந்தது..!

கனவு தோன்றியது போல
சொர்கத்தின் கதவு திறந்தது.....!

எழுதியவர் : (13-Jul-15, 3:12 pm)
Tanglish : kaathaliyin inippu
பார்வை : 103

மேலே