தெய்வத்தாய்
தெய்வத்தாய்
--------------------
இறைவன் உள்ளான்
என்று நம்புகின்றேன்
ஆனால் இறைவனை
இன்றளவும் நேரில்
கண்டேன் இல்லேன்
வானைக் கண்டேன்
விண் மீன்களைக் கண்டேன்
சூரிய சந்திரனையும் கண்டேன்
அந்தரத்தில் சுழலும்
தாரகைகள் கோள்கள்
இவை என்று தெளிவுபெற்றேன்
கடலைக் கண்டேன் -அக்
கடல் நீரின் சுவை அறிந்தேன்
கார்மேகம் கண்டேன் -அவை
தரும் மா மழையும் கண்டேன்
புள்ளினங்கள் பல கண்டேன்
அவற்றின் நிறங்கள் கண்டேன்
அவை தரும் இசையும் கேட்டேன்
மலர்கள் கண்டேன்
மலர்களிலே வண்ண வண்ண
பல நிறங்கள் கண்டேன் -அவற்றின்
மயக்கும் வசமும் நுகர்ந்தேன்
ஓடும் நதிகள் கண்டேன்
மா மலைகள் கண்டேன்
மலைக்க வைக்கும்
விலங்கினங்கள் அதனையும்
கண்டேன் கண்டேன்
மேவிய இவை எல்லாம்
படைப்பையும் படைத்தோனையும்
நினைப்பில் வைத்தன -எனினும்
என் இறைவனை மட்டும்
நேரில் என் கண்டேன்இல்லேன்
என்று நினைத்த வேளையில்
அங்கு என் தாயைக் கண்டேன்
அவள் பொழியும் அன்பில் திளைத்தேன்
அவள் கருணையைக் கண்டு வியந்தேன்
அவள் பொறுமையில் தாய்மையின்
முழுமைக் கண்டேன் -அந்த தாயின்
வடிவில் நான் காணா இறைவன்
உருவம் கண்டு கொண்டேனே .