துளிப்பா ஹைக்கூ கவிஞர் இரா இரவி

துளிப்பா ! ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

மனிதரில் இல்லை
மலர்களிலும் இல்லை
உயர்வு தாழ்வு !

தேநீரெனப் பருகினான்
கதிரவன்
மலர்களில் பனித்துளிகள் !

வேரிலிருந்து
பயணித்தது
கிளைகளுக்கான சத்து !

குளத்தில்
தன் அழகை ரசித்தது
மரக்கிளை !

வருந்துவதில்லை
வெட்டிய வடுக்களுக்கு
பனைமரம் !

கிளைகள் வெட்ட வெட்ட
உயரம் வளர்ந்தது
பனைமரம் !

கழிவுநீர் உறிஞ்சி
இளநீர் தந்தது
தென்னை !

வெளியே கடின முள்ளாய்
உள்ளே இனிக்கும் சுளையாய்
பலா !

இவ்வளவு அழகாய்
பவளம் அடுக்கியது யாரோ
மாதுளம் பழம்!

காரணப்பெயர்
ஆறு ஐந்து சுளைகள்
ஆரஞ்சு !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (18-Jul-15, 2:07 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 139

மேலே