பூக்களின் தவம்

உனது கூந்தலே
பூக்களின் தவமானால்
சூடி விடேன்
சுடர்க்கொடியே !

உன் நெற்றியே
பொட்டின் தவமானால்
வைத்துவிடு என்
வைகையே!

கம்மலின் தவம்
உன் காதில் இருப்பது தானாம்!

சங்கிலிக்கு உன்
சங்கு கழுத்தின் மேல்!

புடவைகள் பெருமாளிடம்
கெஞ்சியதாம்
நீ கட்டும் வரம் தர !

எழுதியவர் : அர்ஜுன் (19-Jul-15, 12:21 pm)
Tanglish : pookalin thavam
பார்வை : 337

மேலே