பூக்களின் தவம்

உனது கூந்தலே
பூக்களின் தவமானால்
சூடி விடேன்
சுடர்க்கொடியே !
உன் நெற்றியே
பொட்டின் தவமானால்
வைத்துவிடு என்
வைகையே!
கம்மலின் தவம்
உன் காதில் இருப்பது தானாம்!
சங்கிலிக்கு உன்
சங்கு கழுத்தின் மேல்!
புடவைகள் பெருமாளிடம்
கெஞ்சியதாம்
நீ கட்டும் வரம் தர !