வாழ்க்கை
புரிதலற்ற மௌனம் ,
மௌனம் கூட
எப்போதாவது புரிந்துவிடும் ..
ஆனால் ,
எப்போதுமே புரியாது தொடரும்
ஒரு பயணம்....
முடியும் போது
தொடங்கும் பொழுதுகள் ,
தொடங்கும் பொழுதில்
முடிந்தே போகும் ....
உறவென்று வரும்
உறவொன்று ,
அது நிரந்தரமென்று
நம்பி தொடர்ந்தால்
நிச்சயமாய் தொலைவோம் !
வலி கொண்டு...
கூட வரும் நிழல் கூட
கூடவே வராது போகும் !!
கூடவே வருவேனென்று
சொல்லிச் சென்ற உறவுகள்
கூட வரும் போதே
நிழலாக கூடும் .....
மனம் புண்ணாகும் போதும்
இதழ் புன்னகைக்க வேண்டும்
பொய்யாக ...
மெய்யாக
எல்லாம் பொய்யாகும் ...
மெய்கூட இங்கே
பொய்த்துதான் போகும்...
இதுதான் வாழ்க்கை !
இதில் எத்தனை வேட்கை !!
எல்லாம் இறைவனின் வேடிக்கை..!!!