கனா கண்டேன்
மாரிப் பொழுதில்
இனம் புரியாத குளிரில்
புடவை முந்தி போர்வை என மாற
அருகில் நீ இருந்து அரவணைத்து
அழைத்து செல்வது போல்
கனா கண்டேன்
அது கனாவாக போகாமல் காத்திடுவாய்
என் அன்பே...
காவேரி கரையில்
கதிரவன் மறைந்த பொழுதில்
உன் மனமும் என் மனமும் காற்றுக்கு துணையாய் பறக்க
நீயும் நானும் மெய் மறந்து சிலிர்க்க
ஆனந்த அக்கலிப்பில் மகிழ்வது போல்
கனா கண்டேன்
அது கனாவாக போகாமல் காத்திடுவாய்
என் அன்பே...
நிலா முற்றத்தில் கயிற்று கட்டிலில் நான் அமர
என் மடி மீது தலை சாய்த்து நீ உறங்க
நிலவோ என் மீது பொறாமை கொண்டு
மேக தூணின் பின் மறைந்து நின்று
என்னை நோட்டமிடுவது போல
கனா கண்டேன்
அது கனாவாக போகாமல் காத்திடுவாய்
என் அன்பே...