கற்சிலைதான் கடவுள்

கடவுளை வணங்கும்
மனிதனே!
செவியிழந்து ஊமையாகி கிடக்கும்
கற்சிலையிடம் ஏனடா
கதறுகிறாய்!

மூன்று வேலையில்
ஒரு வேலை பால் கூட முழுதாய்
கிடைக்காமல்
பசியில் வாடும் குழைந்தைகளின்
கண்ணீர் துளியில்
காணவில்லையா நீ
கடவுளை
இருந்தும் ஏன் கற்சிலைக்கு
பால் அபிஷேகம்!

கண்ணில் காணாத
கடவுளுக்கு வீட்டில் தனியறை
கொடுத்து இன்பம்
காணும் நீ
உன்னை பெற்றெடுத்த
கடவுளுக்கு ஆசிரமங்களில்
இடம் தேடுவது ஏன்!

உயிரல்லாத
சிலையை வணங்காமல்
உயிருள்ள மனிதனை நேசி!
நேசிக்கபட்டவர்களால்
நீயும் வணங்கபடுவாய்
கடவுளாக!!

எழுதியவர் : கார்த்திக் (24-Jul-15, 11:43 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 456

மேலே