வெளியூர் பொறியாளன்

ஓய்ந்து போன தந்தை
ஓய்வு கேட்க வில்லை..
பாதம் பிளந்த அன்னை
பாசம் தவிர்க்க வில்லை..

குடித்து குடித்து கெட்டாலும்
பாசம் வைத்த கிழவன்..
தூக்கம் இன்றி உழைத்தாலும்
கனவு கண்ட கிழவி..

படிக்க வில்லை என்றாலும்
ஆனேன் எந்திர புலவன்..
பிடிக்க வில்லை என்றாலும்
காசை சேர்க்க வேண்டி..

தனிமை வாழ்ந்த வீட்டில்
நானும் வாழ வந்தேன்..
தூக்கம் தொலைத்து விட்டு
தொட்டில் தேடி வந்தேன்..

எழுதியவர் : பிரேம் குமார் (26-Jul-15, 5:26 pm)
பார்வை : 424

மேலே