கலாசார கேடு
அனுதினமும் அரைகுறை ஆடைகள்
வீதிகளில் வளம் வருகின்றன -
நாகரீகம் ..............
ஆண்கள் பெண்களாய்
பெண்கள் ஆண்களாய் .........
கண்ணகி வாழ்ந்த நாட்டில்
கலாசார சீர்கேடு -
சுதந்திரமாய் விபச்சாரம் ............
விளக்கேந்தவேண்டிய கைகளில்
விபரீதம் - மதுகோப்பை..............
வெக்கம் நாணம் நாடுகடத்தப்பட்டு
நாட்கள் வெகுவாகின்றன-
வேதனையில் பெண்மை ........
மகப்பேறை மிஞ்சும் கருக்கலைப்பு -
கண்காட்சி கல்யாணங்கள் ..........
மணமக்களை மணமகன்கள் மிஞ்சுகிறார்கள்
தற்கொலையில் ...........
வரதட்சணைக்கு ஆசைப்பட்டு
வாழ்க்கையை தொலைக்கிறான் இளைஞன்-
பேராசை ........
வாசல் தாண்டாதவள்
வழக்கிற்கு அழைக்கிறாள் - ஜீவனாம்சம்
தாலிகள் அடிக்கடி கழட்டப்படுகின்ற
அத்தியாவசியத்தில் அரசியல் ..........
கட்டுபாடுகளை கண்டுகொள்வதில்லை
கலாசார கேடு .............
கவிஞர் சுந்தர வினாயகமுருகன்