சிறுதுளி -ரகு

கனிந்து
காற்றில் விழுந்த
வேப்பம்பழம்
புற்றுக்கு விரைந்த
எறும்பின் மீது
விழுந்து அழுத்த
லாவகமாய்த்
தனதுடலை
விடுவித்தேகிய
எறும்பு
பழத்தை ருசித்து
தன்
இனத்திற்கும்
பாதை வகுத்ததில்
என்னவோ
சொல்ல வருகிறது
இந்தக் காலம்
துயரம் அழுந்த !!

எழுதியவர் : சுஜய் ரகு (27-Jul-15, 5:57 pm)
பார்வை : 87

சிறந்த கவிதைகள்

மேலே