சலாம் கலாம்

அவர் அனுப்பும்
ஏவுகனைகள் கூட
கருணை கக்கிக் கொண்டுதான் சீறுகிறது...

எப்போதும் புன்னகைக்கும்
பூந்தோட்டமென
கனவுகளின் திறவுகோலையே
தருகிறார்....

எதிர்கால வளையத்தை
நிகழ்காலக் கரங்களில்
விட்டு விட்ட
அக்னிக் கடவுள் அவர்...

தன்னலம் அற்று
விண் நலம் காக்கும்
மண்ணுலகம் தந்த ஹிப்பி
வைத்த அறிவியல் அவர்....

சென்ற இடமெல்லாம்
கல்வியை விட்டுச் செல்லும்
நூலகம் அவர்...

சிறகுகளின் வெளிகளை
சின்னஞ்சிறு குழந்தைகளின்
கண்களில் கொட்டிய விசைக்காரர்..
கூட இசைக்காரர்....

மகாத்மா என்றொரு
சொல்லுக்கு மீண்டும்
உயிர் கொடுத்தவர்,
ஆன்மாவின் வலிமையோடு
இன்னும் இன்னும் நிறைகிறார்..
நிறைக்கிறார்....

கனவைக் கண்டே
தீர்வது தான் அவருக்கான
சமர்ப்பணம்....

மரம் மட்டுமா நட்டார்....
மனங்களையும் தான்...
எனக்கும் எவர்க்குள்ளும்....

வந்தே மாதரம்...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (28-Jul-15, 2:11 pm)
Tanglish : Salaam kalaam
பார்வை : 200

மேலே