உன்னைப் பிரிந்த நான்

உதிர்த்த மழைக்குப்பின் வெறித்து
நின்ற வெற்று வெண்மேகம், போல

இனிய நீல நிறத்தினை இழந்து
தவிக்கும் இரவு நேரத்து வானம், போல

கத்தரி வெயிலில் நீரை நிறுத்திவைக்க
இயலாமல் அசைவற்ற குளம், போல

வாழ்வை அனுபவித்து முடித்து, நீர் ஆதாரம்
மட்டுமே கொண்ட உடல், போல

நினைவுகளின் அடர்த்தி அதிகமாகி
நிலை சுளுக்கி நிற்கும் மூளை, போல

நீயில்லாமல் நினைவு மறந்து
அலைந்து கிடக்கும் என் மனம்.
முடிவுக்கு மட்டுமே காத்துக்கிடக்கும்
உயிர் உருவப்பட்ட என் உடல்.

எழுதியவர் : jujuma (19-May-11, 12:56 pm)
சேர்த்தது : nellaiyappan
பார்வை : 418

மேலே