நான் ஏன் பிறந்தேன்
நான் ஏன் பிறந்தேன்
வரமே விதியாக
வாழ்வின் எல்லைவரை
வாழ்வதே முடிவென்றால்
வாழ்வில் இல்லைகுறை
ஏழை நீயென்றால்
பாசத்தில் பணக்காரன்
கோழை நீயென்றால்
சொர்க்கத்தில் சாத்தான்நீ
கையிருந்தும் காலிருந்தும்
வரமொன்றை எதிர்நோக்கி
வக்கற்று வாழ்பவனே...
கையில்லை காலில்லை
வேறேதும் குறையுமில்லை
எங்கள் வாழ்வென்றும்
வாங்குவதாய் இருப்பதில்லை
வாய்ப்பதே வரமாய்..தொடரும்..