அவசரமாய் தேவை
அவசரமாய் தேவை
அழகான கவிதை...
மற்றவரிடம் இருந்து
இரவல் கேட்க பின்வாங்கியது
என் மனம்...
"நீ சூப்பரா கவிதை எழுதுறடா"
என்று உன் பாராட்டுக்களை
வாங்கியபிறகு...
யாரும் எழுதாத காதல் கவிதையை
புதிதாய் புதுமையாய்
எழுத வேண்டும்..
மின்சாரப் பாய்ச்சலில்
ஒளியைத் திரட்டி
இருக்கின்ற தமிழ் எழுத்துக்களில்
வார்த்தைகளைத் தேட ஆரம்பித்தது
என் பேனா...
உனதிரு கண்களை-
அவை என்மீது காட்டும் காதல் பார்வையை
பார்த்த பின்
தேடல் சட்டென முடிந்தது...
கவிதை கண்ணெதிரில்
உன் வடிவாய்...