இருட்டறை உலகம்

..."" இருட்டறை உலகம் ""...

எங்கள் கனவும் இருட்டாக
அதன் காட்சியும் இருட்டாக
சிரிப்போடு அழுகை சேர்ந்து
எம் அன்றாடம் செல்கிறது !!!

இருட்டறையில் துடன்கியே
இருட்டோடே பயணிக்கும்
இன்பங்கள் இல்லா வாழ்வு
இதுதான் எங்கள் உலகம் !!!

கண்ணிருந்தும் குருடராய்
வாழும் மனிதர் மத்தியில்
கெட்டவைகளை பார்க்காத
பாக்கியசாலிகள் நாங்கள் !!!

அழகுகளும் அருவெருப்பும்
காணாமல் கடந்துசெல்லும்
ஊன்றுகோலே வாகனமாய்
உலகம் சுற்றுகின்ற பயணம் !!!

ஆயிரம்தான் சொன்னாலுமே
இவர்களின் ஆதங்கங்களை
சொல்லில் சொல்லிட முடியா
ஆயிரம் ஆயிரம் வேதனைகள் !!!

கடல் அலைபோல் ஓயாமலே
அந்த இருட்டறையில் இன்றும்
வெளிச்சத்தில் தன் முகம்காட்டா
பத்திரமாய் உள்ளில் பூத்திருக்கு !!!

என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (2-Aug-15, 10:35 am)
பார்வை : 61

மேலே