சோம்பல்
நீ விழிக்கத்தான் நினைத்தாய்
கண்ணை.
கண்ணோ விழிக்க மறுத்தது
நீ எழத்தான் நினைத்தாய்
உடம்போ எழ மறுத்தது
நீ காலை கதிரவனை
பார்க்க நினைத்தாய்
பொழுதோ மதியம் என்றது
ஏன் இந்த மாயம் என்று வியந்தாய் ?!
இதற்க்கு காரணம் காரணம் என்று
காரணம் தேட நினைத்தாய்
சோம்பலோ நான் என்றது
இப்படிக்கு-
சிப்பி - செங்கதிரவன்