துளித் துளியாய்+21-ரகு

பிஞ்சுக் கால்களால்
அந்திக் கதவுகள் திறந்து
விளையாடப் பயணமாகும்
குழந்தைகளுக்கு
தன் மௌன வெக்கை
ஆகாதென
காற்றில் மொழி பாடும்
மரங்களுக்கீடாய்
இந்நேரம்
பூத்திருக்கக் கூடும்
எங்கேனும்
ஒரு கவிதை ......!!

எழுதியவர் : சுஜய் ரகு (6-Aug-15, 12:13 pm)
பார்வை : 84

மேலே