ஆம்,காதல் வந்துவிட்டது
கண்ணுக்கும் கனவுக்கும் வேலை வந்துவிட்டது,
ஆம் காதல் வந்துவிட்டது.
இணையாத இமைகள் நாம்
இருவர் இணைய கனவு காண்கிறது
கலையாத கனவுகள் எனை
தனிமையிலே இருக்க வைக்கிறது
கால்கள் வலிக்கவில்லை போலும் என் நினைவிற்கு
நிறைய தூரம் செல்கிறது.
பள்ளியில் படிக்கவிலை நான்
உன் மனதை படித்தது எப்படி?
அற்புதங்களை நிகழ்த்தவில்லை நான்
ஆச்சர்யத்தில் மூழ்கியது எப்படி?
முதலும் தெரியவில்லை
முடிவையும் விரும்பவில்லை.
அசைவற்று கிடக்கும் உடல்
அமைதியற்ற உள்ளம்
பெருமூச்சு விடும் தேகம் !!!
ஆம் ,காதல் வந்துவிட்டது !!!!!!!