தினம் அதில் -கார்த்திகா

மணல் துகள்களின் மீது
பதிந்த பாதங்களில்
உள்ளோடிய இளம் சூட்டில்
வழிந்து ஓடும்

கருமேகங்கள் நெருங்கிய
நிலவின் இடரில்
வெள்ளொளி பாய்ச்சும்
அதன் வேகத்தில்

இரு தென்னைகள்
காய் கோர்த்த
கிளைக் காதலில்

உன் விரல்
ரேகைகளின்
கால ஸ்பரிசங்களில்

தோற்றுப் போகும்
நான் உயிர்த்த
ஜென்மங்கள்!

எழுதியவர் : கார்த்திகா AK (12-Aug-15, 9:27 pm)
பார்வை : 100

மேலே