உணர்வால் எழுந்திடு தமிழா

உணர்வால் எழுந்திடு தமிழா...
இலைமறை காயாக நீயிருந்தாலும்
உணர்வோடு கனிந்திடு மணம்வீசும்
உலகமே அன்று உனைப்பேசும்
இலையது உதிர்ந்து உரமாகும்போது -நீ
மரமாக உயரும் விதையாகலாம்

உன்னை மூடும் மண்துகள்கள்
புதைப்பதற்கு பதிலாய் விதைக்கின்றன
உணர்ந்தால் போதும் உயிர்த்தெழுந்து
உயரம் தொடும் உயிராகலாம்

எழுச்சியும் மகிழ்ச்சியும் உன்மனதில்
உயிர்பெற இன்றே உணர்வுகொள்
உணர்வால் மொழியால் உலகம்தனை
ஆட்கொள்ள நன்றாய் உறுதிகொள்

எழுதியவர் : moorthi (16-Aug-15, 6:15 pm)
பார்வை : 230

மேலே