மனிதனும் ஒரு வகையில் இறைவனே

மழலை மூலம் மனிதனை
அடையாளம் காண்பது இறைவன்;
மனிதன் அடையும் அதிர்ஷ்டத்தில்
இறைவனை உணர்பவன் மனிதன்.

இறைவன் மனிதனை படைத்தான் மீண்டும் ஒரு
மனிதனை மனிதன் படைத்தான்
படைத்தல் தொழிலினால்
மனிதனும் ஒரு வகையில் இறைவனாகிறான்

ஆக்கல் காத்தல் பணியானால்
மனிதனும் இறைவனே எனில்

அழித்தல் பணியானால் ?

எழுதியவர் : செல்வமணி (16-Aug-15, 8:21 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 111

மேலே