வலிகள்-ஆனந்தி
காதல் மொழி
கண்கள் வழி பேசி
உயிரதுதனில் ஆணி வேறாய்
ரோசா பூக்களின் கூட்டத்தோடு
மழை தூறும்
ஓர் அந்தி மாலை
என் கையோடு கை சேர்த்து
கவிதை சொன்னவன் நீ தானே....
இன்று பாலைவனத்தில்
கனலை தெளித்து
விட்டு சென்றதும் நீ தானே ....
அந்தோ பரிதாபம்
என்றோ உன்னிடம்
வறியவனை காட்டி சொல்ல
என்று நானே ஆனேன் அவ்விதம் ....
மகிழ்ச்சியின் மொத்த
உருவாய் அகந்தையில்
சுற்றி திரிந்தேன் - இன்றோ
வலிகளுக்கே உருவானேன்
வலிகள் என் வாழ்வை
பெயர்த்தெடுக்கும் முன்
வந்துவிடு ...
வாராமல் போனால் -என்
நிலை எதுவோ....