வாய்
" வாய் "
************************
வாயேநீ இருப்பாய் ஐம்புலனில் ஒன்றாக
வாய்நீ வளர்ந்துவிட நாற்புலனும் தடுமாறும்
வாயும் வசைபாட தேயுமே நற்பண்பு
வாயாக வாயிருக்க வைத்திடும் பெருவாழ்வு !
வாயேநீ திறவாதே உறவுகள் சீர்கெடவே
வருவாயே திறந்துநீ கற்றதனை கற்பிக்க
பெரு வாயே தீண்டாதே ஒவ்வாத உணவினங்கள்
பெறுவாயே நீள் ஆயுள் உடலிறுக்கும் பிணியற்று
அறு வாயே தீச்சொற்கள் என்றும் எப்பொழுதும்
அரு வாயே நீமொழிவாய் செவியினிக்க செம்மொழியை
இரு வாயே அசையாது தியானமும் மவுனமுமாய்
தருவாயே இன்பங்கள் துன்பங்கள் தொடராதே !!!