ஆத்திச்சூடி சிறுகதை - உடையது விளம்பேல்

உடையது விளம்பேல்
கோட் செய்யப்பட்ட வாக்கியத்தை மறை
அருமையாக தன்னிடத்தில் உள்ள ஏதாவது ஒன்றை வெளியில் சொல்லக்கூடாது.
சொன்னால் சில வேளை எதிரிகள் அதை பறித்து கெடுதலை உண்டாக்குவார்கள்.அதோடு அருமையான அந்த பொருளின் தன்மையும் குறைந்து விடும்.

ராமர் தன் மனைவி சீதையோடு வனத்தில் வசித்து வந்த காலத்தில் ராமர் இல்லாத சமயம் பார்த்து தந்திரமாக இராவணன் சீதையை தூக்கி சென்ற கதை நாம் யாவரும் அறிந்ததே.

அப்படி தூக்கிச் செல்லப்படும் பொழுது துக்கம் தாளாமல் சீதை ஓவென்று வாய்விட்டு கதறி அழுதாள்.சீதையின் அழுகுரலைக்கேட்ட ஜடாயு என்னும் கழுகரசன் அதி வேகமாக பறந்து வந்து ராவணனை எதிர்த்து போரிட்டான்.

ரொம்ப நேரம் அவர்கள் இருவரும் வெற்றி தோல்வி இல்லாமல் சண்டையிட்டார்கள். ராவணன் ஜடாயுவை வஞ்சனையாக கொல்ல நினைத்து ஜடாயுவிடம் "உன் உயிர்நிலை எங்கே இருக்கிறது?" என்று கேட்டான்.

ஜடாயு சத்தியவான் ஆதலால் பொய்சொல்லக் கூடாது என்று ராவணன் கேட்டதும் தன் உயிர் நிலை தன்னுடைய இறகில் இருப்பதாக உண்மையை சொன்னான் .

பிறகு ராவணனுடைய உயிர் நிலை எங்கே இருக்கிறது எனக்கேட்ட ஜடாயுவிடம் ராவணன் தன் உயிர் நிலை தன் கால் கட்டை விரலில் இருக்கிறது என்று பொய்யை சொன்னான்.

உடனே ஜடாயு ராவணனின் கால் கட்டை விரலை வெட்டினான் அதே சமயத்தில் ராவணன் ஜடாயுவின் இறகுகளை வெட்டி எறிந்தான். தன் உயிர் நிலை வெட்டப்பட்டதால் ஜடாயு துடி துடித்து கீழே விழுந்து மாண்டான்.ராவணனோ ஒரு தீங்கும் இல்லாமல் வெற்றி பெற்று சீதையை தூக்கிச்சென்று விட்டான்.

தன் அருமையான உயிர் நிலையை எதிரியான ராவணனிடம் கூறிய தோஷத்தால் நல்லவன் ஜடாயு தன் உயிரை இழக்கும்படி நேர்ந்தது.

இந்த காரணங்களால் தான் நமது பெரியோர்கள் அருமையான மந்திரங்களை எல்லாம் பெறத்தக்கவர் களுக்கு மட்டும் ரகசியமாக உபதேசிக்கிறார்களே தவிர வெளிப்படையாக சொல்லுவதில்லை

எழுதியவர் : செல்வமணி (வலையில் படித்தத (23-Aug-15, 8:48 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 514

மேலே