கை வைத்தியம்
1. வாழைத்தண்டு, வெள்ளை முள்ளங்கி ஆகியவற்றை அரிந்து உப்பு மிளகு எலுமிச்சை சாறு சேர்த்து வாரம் மூன்று முறை உண்டுவர ஊளைச்சதை குறையும்.
2. பப்பாளிப் பழத்தை தினசரி சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.
3. தினமும் உணவில் புர்ண்டு சேர்த்துக் வந்தால் உடம்பிலுள்ள கொலஸ்டிரால் குறைந்து உடல் கெட்டிபடும்.
4. தினமும் ஒரு கொத்து திராட்சைப்பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் அறவே நீங்கி விடும். அதனால் சளித் தொல்லையும் சரியாகும்.
5. உணவில் அடிக்கடி பாகற்காய் சேர்த்தால் குடலில் உள்ள புச்சிகள் செத்துவிடும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுபடும்.
6. வறட்டு இருமல், தொண்டைப்புண் ஆகியவை இருந்தால் வெந்நீரில் தேன் கலந்து பருகுங்கள். உடனே பலனளிக்கும்.
7. பசும்பாலில் மஞ்சள் பொடியும் மிளகுத்தாளும் போட்டுக் கொதிக்க விட்டு சூடாகக் குடித்தால் இருமல் சரியாகும். புண்ணான தொண்டைக்கு இதமாக இருக்கும்.
8. பனங்கற்கண்டைப் பாலில் போட்டுக் காய்ச்சிக் குடித்தால் இருமல் குறையும்.
9. வல்லாரைக்கீரை மூளையிலுள்ள செல்களை ஊக்குவித்து ஞாபக சக்தியை அதிகமாக்குகிறது. ஆனால் அளவோடு உண்ணவும். அதிகமானால் தலைச்சுற்றல் மயக்கம் ஏற்படும்.
10. பித்த வெடிப்புகளைச் சரி செய்ய பாதங்களை வெந்நீரில் அமிழ்த்தி நன்றாகத் தேய்த்துக் கழுவிய பின், காய வைத்து மஞ்சள்துர்ள் கலந்த ஆமணக்கு எண்ணெயைத் தடவி ஒரு மணி நேரம் ஊறவிட்டு தேய்த்துக் கழுவவும். ஒரே வாரத்தில் பாதம் பட்டு போல் ஆகிவிடும்.
படித்ததைப் பகிர்ந்தேன்.
அருணா செல்வம்.