வெற்றி கொள்

சிறு விதையில்,
ஒரு உயிர் வந்து,
மண் துணைக் கொண்டு,
கண் திறந்து மேல் வரும்.
கால் ஊன்றி,
மேல் நகர்ந்து,
எழும்பி வரும் நேரம்,
மேற் பரப்பில்,
பாறை ஒன்று - அதன்
தலை தூக்க தடுக்கும்.
வளராமல் அழியலாம்,
ஏதொன்றும் ஆகப் போவதில்லை.
ஆனாலும் விடாது,
அந்த சிற்றுயிர், தவறு பேருயிர்,
கிடைக்கும் இடைவெளி புகுந்து,
வெளிவந்து உலகை நிமிர்ந்து பார்க்கும்.
தன்னை விட உயர்வான அவ்வுயிரை,
கரம் கொண்டு தழுவுவான்
தங்கக் கதிரவன்.....