உலக ஊனமுற்றோர் தினம் - சிறப்புக்கவிதை

காதலிக்கு
இமையாக இருக்கிறாய்
ஏன் ?
கண் தெரியாதவனுக்கு
நீ
...
இமையாக இருக்க கூடாது ?

தலைவருக்கு
வலது கரமாய் இருக்கிறாய் !
ஏன்
கை இல்லாதவனுக்கு
வலது கரமாய் இருக்க முடியாது ?


உங்கள் வாய்
நண்பருக்கு
பரிந்து பேசுகிறது !
ஏன்
ஊமையாய் இருப்பவனின்
உணர்வுகளை
புரிந்து பேச முடியாது !

எத்தனையோ
கட்சி கொடி
சுமக்கும்
உமது தோள்கள்
ஏன்
ஒரு
கால் இல்லாதவனை
சுமக்க கூடாது ?


ஊக்கத்தொகை மட்டுமே
அவனுக்கு செய்யும்
உதவி கிடையாது !
ஊக்கப்படுத்துங்கள்
அவனை
"நீ
யாருக்கும் சளைத்தவன் கிடையாது "
என்று !

இடஒதுக்கீடு மட்டுமே
அவனுக்கு காட்டும்
இரக்கம் கிடையாது !
அவனுக்கு
இதயத்தில் கொடுங்கள்
"நீ
யாருக்கும் இளைத்தவன் கிடையாது "
என்று !



ரோட்டை கடக்க
உதவி செய்வதும்
பேருந்தில்
சீட்டை கொடுப்பது மட்டுமே
ஊனமுற்றோருக்கு
செய்யும் உதவி கிடையாது !
நாட்டில்
சமூக நீதியும்
வீட்டில்
சமத்துவமும்
கிடைக்க
அவர்களுக்கு உதவுங்கள் !
அதை தவிர
வேறு பேருதவி கிடையாது !

எழுதியவர் : திருச்சி A .முஹம்மது அபூதா (3-Sep-15, 2:33 pm)
பார்வை : 1902

மேலே