ஆசிரியர் தினம்

சுடரும் தமிழ்விளக்கின் தூண்டலாய் விளங்கி, ஆதுரமாய், தன்னலங்கருதாமல் எனக்கன்பு செய்த எனது ஆசிரியை திருமிகு. புவனேஸ்வரி அவர்களின் பாதங்களுக்கு ஆசிரியர் தினத்தில், பாவினாலும், பாடுகின்ற நெஞ்சத்தாலும் பணிவுடன் வணங்குகிறேன்..!!

******

செந்தழல் வாட்டுஞ் சிறுவித்தை யன்பொடுச்
செந்தமிழ் மண்ணிலே சேர்ப்பித்து - சிந்தையில்
சந்தனம் பூசிச் சலிப்பின்றி நீர்தனை
சிந்தனைத் தேங்கனிச் சீருட னீந்திடத்
தந்தணைத் தாளருந் தாய்.

*******

அன்புடன்,
சுந்தர் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (5-Sep-15, 8:12 am)
பார்வை : 9580

மேலே