எந்தத்தவறும் இல்லை

என்னவனிடம் .....
எந்தத்தவறும் இல்லை ...
நன்கு அறிவேன் ....
செல்ல சண்டையே ....
போடுகிறேன் ....!!!

செல்ல சண்டை தானே ...
கூடலையும் ஊடலையும் .....
கடல் போல் பெருக்கும்....!!!

+
குறள் 1321
+
ஊடலுவகை
+
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 241

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (15-Sep-15, 9:20 am)
பார்வை : 71

மேலே