புனிதமான பெண்மைக்கு புத்திமதிகள் சில

செந்தமிழுக்கு இல்லா உரிமை
வெண்மேனிக்கு
கிடைக்கும் என்றால்
செல்லாதே பெண்ணே -அங்கு
சீரழிப்பார் உன்னை .

பொட்டுக்கும் தாலிக்கும்
பொருந்தாத இடமெனில்
புறக்கணித்து விடு பெண்ணே-அங்கு
பெருமை இழப்பாய் பெண்மையின் .

விழிநோக்கா ஆண்மையின்
விழி பார்க்க நேர்கையில்
விலகிசெல் பெண்ணே
அங்கு -பாதுகாக்கப்படும் உன் பத்தினித்துவம்.

ஆடம்பர வாழ்வை விரும்பாதே
பெண்ணே
அழிந்திட கூடும் உன் அடக்கத்தின்
சிறப்பு .

பெற்றவர் முதியோர் என வெறுக்காதே பெண்ணே
இரண்டு பெற்ற பின் தளர்ந்திடுவாய்
மறக்காதே கண்ணே .

பணம் மட்டும் போதும் என்று
எண்ணாதே பெண்ணே.
பாசத்தையும் சேமித்திட
கற்றுக்கொள் கண்ணே ...!!!

எழுதியவர் : கயல்விழி (16-Sep-15, 7:26 pm)
பார்வை : 1044

மேலே