தினம் தினம் -2-ரகு

சோவெனக்
கொட்டித் தீர்த்ததோடு
மரங்களிலும்
மீந்திருந்தது மழை .....

தலைப்பாகையணிந்து
வெற்றுடலில்
போர்வை சுற்றிய விவசாயி
அரைத் தூக்கத்தில்
கருக்கல் கிழித்து
ஓடலானான்
மண்வெட்டி சகிதம் ...........

அவன் யூகித்தவாறே
நீர்த்தேக்கமிருந்தது
நிலமில்லையங்கு .....

''வீட்டுமனை விற்பனைக்கு''
பதாகையாய்
அவனும் சற்று சரிந்தபோது
யாருக்கோவெனப்
புலரத் துவங்கியது பொழுது ..........!!

எழுதியவர் : சுஜய் ரகு (19-Sep-15, 7:46 am)
பார்வை : 59

மேலே