அன்னல் காந்தி

அண்ணல் காந்தி இருந்தாரு
அகிம்சை வழியை தந்தாரு
தன்னலம் இல்லா வாழ்கையினை
தாவிச் சென்று பிடித்தாரு!

சத்திய சோதனை எழுதியதால்
சத்தியம் தவறாமல் வாழ்ந்தாரு!
அந்நியர்கள் கூட்டம் அழித்தவரு
இந்தியர் சுதந்திரம்பெற உழைத்தாரு!

தேசம் காத்த உத்தமர்தான்
தேசப் பிதாவாய் மாறினாரு
எளிமையை என்றும் கடைபிடித்தால்
ஏற்றம் வருமென்று சொன்னாரு!

அந்நிய பொருட்களை தவிர்தாரு
அனைவரையும் அரவணைத்து சென்றாரு
காதி நூற்க சொன்னவரு
காலத்தால் அழியாப் புகழ்பெற்றாரு!

காந்தி காட்டிய வழிகளைநாம்
காலம் முழுக்க கடைபிடிப்போம்
சுதந்திர காற்றை அனுபவித்து
சுயநலம் இல்லாமல் வாழ்ந்திடுவோம்!

எழுதியவர் : ரவி Shrinivasan (24-Sep-15, 11:14 am)
சேர்த்தது : ரவி ஸ்ரீனிவாசன்
பார்வை : 241

மேலே