என் தாயின் அன்பு

தன்உயிரை எனக்கு தந்து ,
உயிர் கொடுத்தவள் !!

தன் ரத்தத்தை பாலாய் தந்து ,
பாசத்தை ஊட்டியவள் !!

மசக்கையிலும்,வாந்தியாலும் ,தான் துவண்டலும் !!
மனதாலும்,வார்த்தைகளாலும் ,
மற்றவர்களை சந்தோஷபடுத்தியவள் !!

நான் உதைத்த உதைகளை வயிற்றுக்குள் வாங்கி
நெஞ்சத்தில் மகிழ்ந்தவள் !!

நான் அழுத நொடி , அவள் கண்ணீர் விட்டவள் !!

நான் சிரித்த நொடியிலும் , அவள் கண்ணீர் விட்டவள் !!

ஆனந்த கண்ணீராக.. வளர்ந்துதான் இருக்கிறேன்

உடலளவில்,நானும் குழந்தைதான் மனதளவில்,பாசத்துடன் .

அடுத்த பிறவி இருந்தால் செருப்பாக இருக்க வேண்டும்

என்னை வயிற்றிலும் நெஞ்சிலும் தோளிலும் முதுகிலும் சுமந்த என் தாயே ஒரு முறை நான் சுமப்பதற்க்கா.

என்றும் நட்புடன் உங்கள் மகன்

எழுதியவர் : செல்வமணி (25-Sep-15, 10:01 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : en thaayin anbu
பார்வை : 315

மேலே