ஓ

அப்படி பார்க்காதே
என்னை
எத்தனை முறைதான்
தற்கொலை செய்து கொள்ளும்
உன்னுடன் பேச முடியாத
வார்த்தைகள் அனைத்தும்.
கண் பட்டுவிட்டால்
திருஷ்டி சுத்த வேண்டுமாம்
என் திருஷ்டியே
நீ தானடி
தோற்ற காதல்
பேசப்படுமாம்
உன்னிடம்
பேசாமல்
தோற்றதடி
என் காதல்