அம்மா

கருவேல மரங்கள வெட்டுனா
நிலத்தடி நீர் அதிகரிக்குமாம்;
அம்மா!
இந்த ஊருக்கும் நீ
நல்லதுதானே செஞ்சிருக்க!
************
அம்மா,
நான் சம்பாதிச்சு மொதல்ல‌
உனக்கொரு
புதுசேல வாங்கித்தரனும்.
எனக்கு வெவரம் தெரிஞ்சி
உம் புருஷன்
சேல வாங்கி கொடுத்ததில்லையே!
******************
அம்மா நீ மட்டும்
புது சேல கட்டிக்கிட்டு
கருவேல மரங்கள வெட்டப்போனினா,
மரங்களெல்லாம் தெகைச்சி நிற்கும்.
யார்ரா இவ?
புதுசா நம்மல வெட்ட வந்திருக்காளே?
****************
கஷ்டம்னு ஒன்னு வந்தா
கண்ணீர்விட்டு அழாம,
உன் போட்டுவதான்
பார்க்கத்தோனுது.
கஷ்டம் வரும்போதெல்லாம் நீ
அழுதிருந்தா?
எனக்கு இப்படி
எழுதவோ படிக்கவோ தெரிஞ்சிருக்குமா?
*********************

எழுதியவர் : சுகுமார் சூர்யா (28-Sep-15, 1:48 pm)
பார்வை : 164

மேலே