வேடிக்கையுடன் சிலர்

பெண்ணென்றால் பேயும் இரங்கும்
இனவெறியருக்கு இல்லை இரக்கம்
குழந்தைகள் என்றால் கடவுளுக்கு சமமே !
காடையருக்கு இல்லை மனமே !

ஓடி ஓடி பாதம் தேய்ந்து
உறவுகளின் உறக்கமும் ஓடி மறைந்து
நடக்க முடியாதவைகளும்
நினைத்திராத மர்மமாய பூஜைகள்
நடந்தேறியது எம் ஈழத்தில்

இயற்கையின் கொடையால்
இறையருள் வேண்டி
இன்பமாய் வாழ்ந்த
இன்பலோகம் இன்றைய சுடுகாடாய்

ஒருவர் மாண்டால் ஊர் கூடி ஒப்பாரி
அருகினிலே உறவுகளின் பிணக்குவியல்கள்
புதைப்பதற்கு கூட காலம்
கையிலில்லை இவர்களுக்கு
அள்ளி கொடுத்த கைகள்
கிள்ளிக் கொடுக்க தயங்கும் பார்வைகளுடன்
இன்று இழப்பதற்கு எதுவுமின்றி
தானமாய் வழங்கிய இன் உயிரைவிட
விலையும்,கொலையும் தினந்தோறும்
காண்கின்ற காட்சிகளாக
பிஞ்சி குடிக்கும் பாலுக்கும் விலை
கஞ்சி குடிக்கும் ஏழைக்கும் விலை
வேடிக்கையுடன் சிலர்
வேதனையுடன் பலர்...

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (28-Sep-15, 1:48 pm)
பார்வை : 80

மேலே