பனிப்பாறை
![](https://eluthu.com/images/loading.gif)
உறைந்தே கிடக்கும் பனிப்பாறையாய்
பாலைவன நடுவினில் என் காதல்,
கதிரவன் எதிர்திசையில்
வண்ணங்களில்லா வானவில்லை தோற்றுவித்ததோ?
அதோ தெரிகிறது!
நீயும் எங்கோயிருந்து காண்கிறாய்!
யாரிடமும் சொல்லிவிடாதே, நம்பமாட்டார்கள்!
உருகியதோ அந்த பனிப்பாறை,
கானல் நீரில் கால் கழுவச்செல்கிறேன்.
உன் பிம்பம் தெரியாமலிருக்கட்டும்!