தோல்வியை கண்டு துவளாதே

எனை போன்ற மனிதனே
எத்தகைய
தோல்வியை கண்டும் துவண்டு விடாதே!

எத்தகைய தோல்வி இருப்பினும்
அதை எதிர் கொள்ளும் துணிவு
அதை விட அதிகமாய் உன்னிடம்
இருப்பதை முதலில் உணர்ந்துகொள்.!

தோல்வி சற்று கடினமான
வலி தானே தவிர அது இரணமாகி
பின் வடுவாகிய தழும்பு அல்ல.!

யாருக்கு தான் தோல்வி இல்லை - இங்கே
தோல்வியை கண்டு துவண்டு விடாமல்
தோல்வியை உன் தோளில் சுமந்து செல்ல பாரு
அதுவே ஒரு நாள் பல வெற்றிகளின்
வழி துணையாக அமைந்திருக்கும்.!

எழுதியவர் : அன்புடன் கா.சக்திவேல் (12-Oct-15, 10:51 am)
பார்வை : 281

மேலே